16/2/13

சந்திரலேகாவின் முகத்தில் வீசப்பட்ட ஆசிட்டும் ஜெயலலிதாவின் துர்சொப்பனங்களும்




ஆசிட் வீச்சால் கொடுமையாக முகம் பாதிக்கப்பட்டிருந்த சந்திரலேகாவின் அம்மா ஒரு எழுத்தாளரென்பது லில்லி தெய்வசிகாமணி நினைவு இலக்கிய பரிசளிப்பு விழாவில் தான் பலருக்கும் தெரியவந்தது.

நீல.பத்மநாபனின் கூடவே உணவிற்கு கிளம்பிப்போனவர்களில் சந்திரலேகாவின் அம்மாவும் இருந்தார். கோவை உணவின் ருசியை அறிவதற்காக கைச்சோற்றை வாய்க்கு கொண்டுபோகும் தருணம் வெட்கங்கெட்ட பிரகிருதி சந்திரலேகாவின் முகத்தில் வீசப்பட்ட ஆசிட் கொடூரத்தை குறித்து விசாரிக்க துவங்கினார்.

சந்திரலேகாவின் அம்மாவின் கண்களிலிருந்து திரண்டு வந்த கண்ணீரை சேகரிக்கும் வலு என் வார்த்தைகளுக்கு இருந்திருக்கவில்லை. அழுகையினுடே ஜெயலலிதாவை தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டதுவங்கினார். சந்திரலேகாவின் வதைக்கப்பட்ட வாழ்வின் முன்னால் அவ்வார்த்தைகள் மிகச்சாதாரணம். தினம் தினம் அனுபவிக்கும் சந்திரலேகாவின் வேதனைகளை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் நமக்கு இருக்கிறா என்ன?

அழுகைக்கு பின்னான உணவை உண்ணும் மனநிலைகொண்டவர்கள் அக்கூட்டத்தில் இருந்திருக்கவில்லை. கொடூரமான ஆசிட் தாக்குதலுக்கு ஆளான சந்திரலேகா துடித்த துடிப்பை சந்திரலேகாவின் அம்மா விவரித்தபோது நடுங்கிய ஈரக்கொலையை நிறுத்த தெரிந்திரா மனங்களில் ஒழுகிய குருதியை விநோதினியின் ஆசிட் தாக்குதலுக்கு பிறகு அனேக மனங்களில் காணமுடிந்தது.

ஆசிட்டால் தாக்குவது கலாச்சாரமாக வளர்தெடுக்கப்படுகிறதோவென்ற அச்சம் கொண்ட மனங்களின் கண்ணீரை சமூக வலைதளங்களில் காணும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்திருக்கிறது.

பெண்ணுடலை கொடூரமாக வதைப்பதன் மூலமடைகிற குரூர ருசியை அறிந்துகொண்ட மிருகங்களை எந்த வார்த்தைகளால் திட்ட?

0 comments:

கருத்துரையிடுக