29/11/12

அணுஉலை கழிவு சேகரிப்பு திட்டம்(2012/08/03)



ஒரு இனிப்பான அறிவிப்பு. உலக அணுகழிவுகளை சேகரிக்க எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. உங்களை வளமானவர்களாய் மாற்றப்போகும் ஒரு அற்புதமான திட்டம். உங்களை கோடீஸ்வரனாக்கபோகிறது எங்கள் பதிப்பகம்.

 திட்டத்தில் பத்து சென்று சொந்த நிலமுள்ளவர்கள், நிலமற்றவர்கள் ,விவசாயிகள், பங்குதரகர்கள் ,கணிபொறியாளர்கள், அரசாங்க பணியிலியிருந்து ஓய்வுபெற்றவர்கள், எம்எல்எம் திட்டத
்தில் ஊரைவிட்டு ஓடியவர்கள், இன்சூரன்ஸ் ஏஜென்றுகள், கல்லூரி நிறுவனர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ,அமுல்பேபிமுகமுள்ளவர்கள், ஊர்நல்லவர்கள், சேரலாம். 

முதலீடு மிககுறைவு லாபம் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக்கும். ஈமுகோழி வளர்ப்பு போல எளிய திட்டமும்கூட. முப்பது வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வசதி. இருபத்திஐய்யாயிரம் வருடங்களுக்கு ஒப்பந்தத்தை உறுதிபடுத்தும் வசதி.

 நிலங்களில் ஆழகுழி தோண்டி உலகத்திலிருந்து தருவிக்கப்பட்ட உயர்தர அணுஉலை கழிவுகளை புதைப்பது. 

நிலத்தின் மேற்புரத்தில் வீடுகட்டி கொள்ளலாம். காய்கறி தோட்டங்கள் அமைக்கலாம். விவசாயம் செய்யலாம். நிலமற்ற நகரத்துமக்களுக்கு ந ங்களே நிலம் ஏற்பாடு செய்து தருகிறோம். பார்வையிட வாகனவசதி உண்டு.

 புத்தகம் போடும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை. மின்ஊழியர்களுக்கு இருபதுசத கழிவு. திட்டத்தில் சேரும் முதல் ஒரு லெட்சம் பேருக்கு புத்தகசந்தையில்புத்தகம் வெளியிடப்படும். திட்டத்தில் சேராதவர்களது புத்தகங்கள் பிடிஎப்பில் பதிப்பித்து இலவச விநியோகம் நடக்கும். மாதம் ரூபாய் ஆயிரம் ஒப்பந்த காலம் முழுவதும் வழங்கப்படும்.

தொடர்பு முகவரி
7 குறுக்குசந்து
கேபி ரோடு

நாகர்கோயில்

0 comments:

கருத்துரையிடுக