4/1/13

தீவிர இதழின் தயவில் பாலியல்தொழிலாளியாய் சித்தரிக்கப்பட்ட இரு பெண்கள்



தீவிர இதழின் நாகர்கோயில் அலுவலகத்தில் டி.டி.பி ஆப்ரேட்டர் பணியில் புதிதாய் இணைந்த பெண்கள் தங்கள் நெற்றியில் ஒட்டப்படப்போகும் வாழ்நாள் லேபிளைக்குறித்து அறிந்திருக்கவில்லை. உற்சாகம் நிரம்பிய அவ்விரு பெண்களும் பொருளாதார நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மீனாட்சிபுரம் பகுதியில் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பதை பகுதிநேரமாக செய்துவந்தாலும் டிடிபி ஆப்ரேட்டர் பணியை திறமையாகவே செய்துவந்தார்கள். 

பத்திரிகை அலுவலகத்துக்கு வந்துபோகும் படைப்பாளிகளிடையேயும் இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்றது தலையெழுத்தை மாற்றிவிடுமென்று அவ்விரு பெண்களும் எதிர்பார்த்திருக்கவில்லை. 

தீவிர இதழின் முதலாளியம்மா ஒரு பிரபல இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பது குமரிமாவட்ட மக்களும் புத்தகம் பதிப்பித்த படைப்பாளிகளும் அறிந்திருந்த செய்தியை அவ்விருபெண்களும் கவனத்தில் எடுத்திருக்காததால் தங்கள் வாழ்நாளின் எந்த கணத்திலும் அழிக்கமுடியாத பழியை சுமக்கப்போவதை எதிர்பார்த்திருக்கவில்லை.

 பொங்கியெழுந்த தீவிர இதழின் முதலாளியம்மா அவ்விரு பெண்களையும் பாலியல்தொழிலாளிகளாய் சித்தரித்து
காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். 

பாலியல்தொழிலாளிகளாய் குற்றம்சாட்டப்பட்ட இருபெண்களையும் பரிதாபமாய் எதிர்கொண்ட பெண் சப் இன்ஸ்பெக்டரின் இரக்கத்தின் செவிகளை கண்ணடிப்பவர் சரிகட்டியதால் இரக்கம் குப்பையில் வீசப்பட்டது. 

இவ்விரு பெண்களின் நலிவடைந்த பெற்றோர்களைநெய்தல் கிருஷ்ணன் தன் சாக்கு குடோனில் வைத்து சமாதானப்படுத்தினார். 

விஷயமறிந்த பத்திரிகையாளர்கள் மனிதர்களாக இருந்ததால் வேடிக்கைமட்டுமே பார்த்தார்கள். டெல்லியின் கடுங்குளிர் சாலையில் தன்னைக்காத்துக்கொள்ள போராடிக்கொண்டிருந்த பெண்ணை வேடிக்கைப்பார்த்தபடி கடந்துபோனதும் மனிதர்கள் தானே.

0 comments:

கருத்துரையிடுக