31/12/12

விஷச்சாராய வழக்கு


காலச்சுவடு ஆசிரியர் குழுவில் இருந்த லஷ்மி மணிவண்ணனுக்கு என்ன பரிசு கிடைத்திருக்குமென்று கற்பனை செய்யமுடியாமல் போனவர்கள் கனவுகளுக்கு வெளியேகூட ஜீவிக்க தகுதியுண்டாவென்று நான் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறேன்.

விஷச்சாராய வழக்கு பதியப்பட்டு கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட லஷ்மி மணிவண்ணன் என்கிற கலைஞனை ஞாபக அடுக்கில் புதைக்காதவர்கள் இலக்கியத்தின் பக்கங்களை புரட்டிப்பார்க்கும் அனுமதியுடன் இன்னுமா அலைகிறார்கள். வரலாற்றுக்கொடுமையென்னவென்றால் விஷச்சாராய வழக்கில் லஷ்மி மணிவண்ணனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது தான்.

என் ரத்தநாளங்களின் சுருதி மாறியது அத்தருணத்தில் தான். கைவிடப்பட்ட கலைஞர்களின் குமுறல்கள் என் செவிப்பறையில் புதிய துளையை உண்டுசெய்தன. வார்த்தைகளையே உயிலாக எழுதிவைத்துவிட்டுப்போன காநாசுகளும் பசியால் செத்துப்போன புதுமைப்பித்தன்களும் இளமையோடு தற்கொலை செய்துகொண்ட சில்வியாபிளாத்துகளும் கைவிலங்கிட்டு கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்ட லஷ்மி மணிவண்ணனின் கண்களில் வந்துபோன அக்கணத்தில் உயிர்த்தவன் தான் குருசு.சாக்ரடீஸ்.

0 comments:

கருத்துரையிடுக